நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 11-04-2025ம் திகதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்றைய தினம் மு.பகல் 10.30 மணியளவில் எம்பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து விசேட பூஜாராதனைகள் நடைபெற்று தொடர்ந்து கந்த புராண படனத்தின் இறுதி நிகழ்வான வள்ளியம்மன் திருமணப்படலம் ஓதுவார்களினால் படனம் செய்யப்பட்டு புத்தகம் கட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சோடசோபசாரங்களுடன் கூடிய சிறப்பு பூஜாராதனைகள் நடைபெற்று, விஷேட பஜனைப் பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.
எனவே அருள்மிகு முருகையாவின் அடியார்கள் அனைவரும் இந்த பங்குனி உத்தர நாள் உற்சவ நிகழ்வுகளில் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவைத் தரிசித்து, திருவருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
உபயம் – சுந்தரலிங்கம் பார்த்திபராசா குடும்பம் – லண்டன்
நிர்வாக சபையினர்