சித்திரை புதிய விசுவாவசு வருஷ விசேட பூஜை!- 2025

எதிர்வரும் 14-04-2025 அன்று திங்கட்கிழமை அதிகாலை 02.29 மணிக்கு அபரபக்க பிரதமை திதியில், சுவாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில், மகர லக்கினத்தில், செவ்வாய் காலவோரையில் சித்திரை புதிய விசுவாவசு வருஷம் பிறக்கின்றது.

முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 10.25 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை காலை 06.29 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்

இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து, மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, சிவப்பு, நீல நிற பட்டாடையாயினும், சிவப்பு, நீலக் கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும்.

புதிய விசுவாவசு வருடப் பிறப்பு நாளாகிய 14-04-2025 திங்கட்கிழமை மேற்கூறிய வண்ணம் ஸ்நானம் செய்து புதிய வஸ்திரமணிந்த பின்னர், மனத்தூய்மையுடன் குலதெய்வங்களை வழிபாடு செய்து, பிதா, மாதா, குரு ஆகியோரை வணங்கி, இயன்ற தான தருமங்கள் செய்து மங்களகரமாக வாழக்கடவர்.

புதிய விசுவாவசு வருஷ தோஷ நட்சத்திரங்கள்:-

திருவாதிரை, சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களைச் செய்தல் வேண்டும்.

அன்றைய தினம் அருள்மிகு முருகையா ஆலயத்தில், காலை 9.30 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று, ஆலய வாசலில் பொங்கல் செய்து படைத்து, சித்திரைப் புதிய விசுவாவசு வருஷ விசேட பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த சித்திரை புதிய விசுவாவசு வருடப் பிறப்பு விசேட பூஜையில் முருகையாவின் அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – மா.அருமைலிங்கம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்